மாணவரை 04 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை; கொழும்பு பாடசாலையில் சம்பவம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் பணியாற்றும் திருமணமான 34 வயதுடைய ஆசிரியை ஒருவர், அதே பாடசாலை மாணவரை நான்கு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு கொழும்பு மேலதிக நீதவான் லொச்சனி அபேவிக்ரம நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரை, அந்த மாணவருக்கு 16 வயதாக இருக்கும் போது, கிரிக்கெட் போட்டித் தொடரொன்றில் சந்தித்துள்ளார்.
அதன்பிறகு, அவர்கள் வாட்ஸ்அப் மூலம் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளனர். மேலும் கணினி அறை மற்றும் பல இடங்களில் தன்னுடன் பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்கு அந்த மாணவரை ஆசிரியரை கட்டாயப்படுத்தியதாக நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த மாணவரை கல்கிசையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு ஆசிரியை அழைத்துச் சென்றதாகவும், அவர் தனது அடையாள அட்டையை பதிவுக்காக அங்கு சமர்ப்பித்ததாகவும் பொலிஸார் நீதிமன்றில் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவருக்கு தற்போது 20 வயதாகிறது.
சந்தேகநபரான ஆசிரியையிடம் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.