ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது

🕔 February 25, 2022

ஷ்ய – யுக்ரைன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கையின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார்.

“ரஷ்ய – யுக்ரைன் விவகாரம் தொடர்பில் இலங்கை தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

அத்துடன், அங்குள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனவும் அவர் கூறினார்.

அதேநேரம், பெலாரஸில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்