ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை

🕔 February 23, 2022

ஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் மென் பிரதியொன்றை வழங்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேற்படி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிப் பதிவுகள் அடங்கிய 88 தொகுதிகளும் ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகத்தினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று கையளிக்கப்பட்டன.

இறுதி அறிக்கையின் காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ, 70,000 பக்கங்களுக்கு மேல் கொண்ட அறிக்கையின் மென் பிரதியை வெளியிடுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்