முகக் கவசம் தேவைப்படாது: சுகாதாரப் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

🕔 February 21, 2022

லங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையின் அனைத்து மக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த மட்டத்தை எட்டினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவற்கான அனுமதிக்காக பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சில சமயங்களில் ஒரே நபர் பல சந்தர்ப்பங்களில் கொவிட் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் உள்ளதென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்