ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

🕔 February 8, 2022

ரு கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வீதியில் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபரான பெண்ணிடமிருந்து ஒரு கிலோ 64 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளனது.

சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவராவார்.

இப்பெண்ணும் அவரது கணவரும் இணைந்து இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்