பாவனை குறைந்தால் மின்வெட்டு இல்லை: மின்சார சபை அறிவிப்பு
குறைந்தளவு மின்சாரப் பாவனை நிலவுமாயின், இன்றும் (04) தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால், குறைந்த மின்சாரப் பாவனை நிலவியமையால், மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை.
இருந்த போதிலும், இன்றைய தினமும் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக பத்தள மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் அவசியமாகும் என மின்சார சபையின் பேச்சாளரான, மேலதிக பொது முகாமையாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
தற்போது எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ள களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்துக்கு எரிபொருளை வழங்க மேலும் சில நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்புக்கு 280 மெகாவோட் மின்சாரம் கிடைக்காமல் போயுள்ளது.
இதேவேளை, கால அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்காமையானது, பிரச்சினையானதாகும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கால அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.