திருமதி அழகு ராணியிடம் 50 கோடி இழப்பீடு கோரி, மேயர் ரோசி கடிதம்
திருமதி அழகு ராணி பட்டத்தை வென்ற புஷ்பிகா டி சில்வாவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தனது சட்டத்தரணி மூலம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த உலக திருமதி அழகு ராணி போட்டியின் இறுதிப் போட்டி முடிவுகளை மாற்றுவதற்கு, தான் அழுத்தங்களை கொடுத்ததாக புஷ்பிகா கூறியதன் மூலம், தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரோசி சேனாநாயக்க தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
குறிப்பிடப்பட்டுள்ள நாளில் கோரியுள்ள இழப்பீட்டு தொகையை செலுத்தி, தன்னிடம் மன்னிப்பு கோரவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக கொழும்பு மேயர் தனது சட்டத்தரணி ஊடாக அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.