அரிசி இறக்குமதி செய்ய மியன்மாருடன் உடன்படிக்கை
அரிசியை இறக்குமதி செய்வதற்காக மியன்மாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.
மியன்மார் அரசாங்கத்துடன் வர்த்தக அமைச்சு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி நாட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கும் நோக்கில் இந்த அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.