நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ராஜிநாமா செய்கிறார்

🕔 November 23, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இன்னும் சில தினங்களில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்றைய (23) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

தனது பதவி விலகலை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவராக பதவியேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சி மூலம் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டு, இவர் நாடாளுமன்றுக்கு தெரிவானார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இவர் அமைச்சராகப் பதவி வகித்த போதிலும், தற்போதைய அரசாங்கத்தில் இவருக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் கிடைக்கவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்