மிதப்புப் பாலம் மூழ்கியதில் பிஞ்சுகள் உட்பட 06 பேர் பலி: குறுஞ்சாக்கேணியில் சோகம்
திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்புப்பாலம் மூழ்கியதில் அதில் பயணம் செய்தவர்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 04 சிறுவர்களும் அடங்குவதாகக் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களில் நான்கு பேருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
அங்கு பாலம்ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், தற்காலிகமாக அங்கு மிதப்புப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலம் மக்கள் போக்குவரத்துச் செய்து வந்தனர்.
இந்த மிதப்புப் பாலம் மூழ்கியமையினாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.