தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்: ஒக்டோபர் வரை நீடிப்பு

🕔 September 17, 2021

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான சிறப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ‘ட்விட்டர்’ பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் அது செப்டம்பர் 06ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு தொடர்ந்தும் 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. அதனையடுத்து 21ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

.இந்த நிலையிலேயே, மேலும் ஒரு வாரம் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்