ராஜிநாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவாட் கப்ரால்

🕔 September 13, 2021

நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

தற்போது தனது நாடாளமன்ற உறுபப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ள அஜித் நிவாட் கப்ரால் – மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்