பராலிம்பிக் போட்டி: உலக சாதனை படைத்தார் இலங்கை வீரர்

🕔 August 30, 2021

டோக்கியோவில் நடைபெற்று வரும் 2020 பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் இப்போட்டியில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் முதலிடத்தைப் பெற்றதோடு, உலக சாதனையினையும் படைத்துள்ளார்.

67.79 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி எறிந்ததன் மூலம் அவர் உலக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த F46 ஈட்டி எறிதல் போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும், வெண்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்