பேக்கரி பொருட்கள் வழமை விலையில் விற்கப்படும்

🕔 August 23, 2021

பேக்கரி உற்பத்திப் பொருள்கள் எவ்வித விலை உயர்வுமின்றி வழமை விலையில் விற்பனை செய்யப்படும் என மாகாண பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாகாண பேக்கரி உரிமையளார்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் காமினி கந்தேகெதர, நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று (22)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோது இதனை கூறியுள்ளார்.

எனினும், ஒரு றாத்தல் பாணின் விலை இன்று முதல் 05 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டிருந்தது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவாலும், ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் தலைவர் என். கே.ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

தொடர்பான செய்தி: பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகள், திங்கட்கிழமை அதிகரிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்