நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகிறது
நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை தினமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளை தொடக்கம் இந்த ஊரடங்குச் சட்டம் – மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தியவசியத் தேவைகளின் பொருட்டு பயணிப்போருக்கு இதன்போது சலுகை வழங்கப்படும்.
ஏற்கனவே, நாட்டில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை