சீனாவில் சமூக ஊடகங்கள் இல்லை; இலங்கையிலும் தடை அல்லது ஒழுங்கு படுத்தல் வேண்டும்: அமைச்சர் நிமல்
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் அல்லது இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு சமூக ஊடகங்கள் முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டினார்.
பல சமயங்களில் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்பியதாகக் கூறிய அமைச்சர், குழந்தைகள் துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்க சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது அல்லது தடை செய்வது அவசியம் என்றார்.
சீனாவில் சமூக ஊடக தளங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்றும், இலங்கையில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த அல்லது தடை செய்ய சட்டங்களை அறிமுகப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.