றிசாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

🕔 July 17, 2021

குற்றப் புலனாய்வு பிவிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் சுகயீனமுற்று இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகஹன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினர், றிசாட் பதியுதீனை கொழும்பிலுள்ள அவரின் வீட்டில் கைது செய்தனர்.

அன்று தொடக்கம் இதுவரை அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்