
லக்சல நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குணவர்தன இன்று திங்கட்கிழமை காலமானார்.
கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெரஹெரவிலுள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
பிரதீப் குணவர்தன இறக்கும் போது சலுசலாவின் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.



