ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து பெற கைச்சாத்து

🕔 February 19, 2021

ந்தியாவில் இருந்து கொவிட் 19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்தியாவின் மருந்து உற்பத்தி நிறுவனமான சேரம் நிறுவனத்தில் இருந்து ஒரு கோடி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான உடன்படிக்கையின் சரத்துகளுக்கு அண்மையில் சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

ஏற்கனவே 05 லட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்