கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்: மரிக்காரின் கேள்விக்கு பிரதமர் பதில்
கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜாபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் உறுதியளித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, பிரதமர் இதனைக் கூறினார்.
“ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே நேற்று சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுக்கு பதிலளிக்கும் போது; நீரில் கோவிட் வைரஸ் பரவாது என்று கூறினார். அப்படியென்றால் கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமிக்கப்படுமா என பிரதமரிடம் நான் கேட்கிறேன்” என, மரிக்கார் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ; “கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்” என்றார்.