
சர்ச்சைக்குரிய எவன் கார்ட் நிறுவனத்துமேடனான சகலவித ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தவவலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் ராஜித மேலும் தெரிவிக்கையில்;
“எவன் கார்ட் நிறுவனம் தொடர்பான சகல ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளை கடற்படையினர் பொறுப்பேற்க வேண்டுமெனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.



