மூத்த எழுத்தாளர் மருதூர் ஏ. மஜீத் மறைந்தார்

🕔 December 26, 2020

– அஹமட் –

‘மணிப்புலவர்’ என அழைக்கப்படும் மூத்த கல்வியலாளரும் எழுத்தாளருமான மருதூர் ஏ. மஜீத் இன்று சனிக்கிழமை காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக அவர் தனது 81ஆவது வயதில் சொந்த ஊரான சாய்ந்தமருதில் வபாத்தானார்.

ஆசிரியராக தனது பணியை ஆரம்பித்த இவர், வயலக் கல்விப் பயணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

இவர் சுமார் 20 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மகனும், ஒரு மகளும் என – இரு பிள்ளைகள் இவருக்கு உள்ளனர்.

மருதூர் ஏ. மஜீத்தின் நல்லடக்கம் இன்று பிற்பகல் சாய்ந்தமருதில் இடம்பெற்றதாக அவரின் சகோதரர் மருதூர் ஏ. ஹசன் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்