லஞ்சக் குற்றச்சாட்டு: ஒரே நிறுவனத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்

🕔 December 18, 2020

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் கடமை புரியும் 600 உத்தியோகஸ்தர்கள் உடன டியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

லஞ்சம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைப் பரிசீலித்த பின்னர், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தான் உட்பட கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி சேவையில் இணைந்து கொண்டவர்கள் மாத்திரம் தொடர்ந்தும் போக்குவரத்து திணைக்களத்தில் பணி யாற்றுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறித்த திணைக்களத்தில் இடமாற்றங்கள் பல கட்டங்களாகச் செயற்படுத்தப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்