கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

🕔 November 18, 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டில் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இன்று புதன்கிழமை இரவு 09 மணி வரையில் நாட்டில் 18,400 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாக மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 12,587 பேர் குணமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்