கொரோனா: 21 ஆவது நபர் பலி

🕔 November 1, 2020

கொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மரணமாகியுள்ளார்.

இது கொரோனாவினால் ஏற்பட்ட 21ஆவது இறப்பாகும்.

மரணித்தவர் மஹர பகுதியை சேர்ந்த 40 வயதான ஆணொருவராவார். வெலிசறை வைத்தியசாலையில் இவர் உயிரிழந்தார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரையில் (9.00 மணி வரையில்) 11,060 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4,905 பேர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்