திவுலபிடிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா உறுதி

🕔 October 4, 2020

திவுலபிடிய பகுதியில் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் 16 வயதுடைய மகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேற்படி மகள் தற்போது கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை அடுத்து, திவுலபிடிய மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களில் பொலிஸ் ஊடரங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த பெண்ணோடு தொடர்புட்டவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்பான செய்தி: பெண்ணொருவருக்கு கொரோனா; திவுலபிடிய, மினுவாங்கொட பகுதிகளில் ஊடரங்குச் சட்டம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்