19ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்: சுரேன் ராகவன்

🕔 August 17, 2020

ரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனத் வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தமானது அரசாங்கத்தையும் அரசையும் சாய்த்து வீழ்த்தி விடும் நிலையை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியள்ளார்.

தனியார் ​தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே, அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“19ஆம் திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால் அ​தனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம் தான் இன்று நாட்டில் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்