தலைப்புச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அதிகூடிய விருப்பு வாக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன சார்பில் இவர் போட்டியிட்டார்.

பொலநறுவை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன 04 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனத்தையும் பெற்றுள்ளன.

வெற்றிபெற்றோர் விவரம் வருமாறு;

பொதுஜன பெரமுன

மைத்திரிபால சிறிசேன – 111,137
ரொஹான் ரணசிங்க – 90,615
சிறிபால கம்லத் – 67,917
அமரகீர்த்தி அதுகொரல – 45,939

ஐக்கிய மக்கள் சக்தி

கின்ஸ் நெல்ஸன் – 22,392