மே 28 இல் பொதுத் தேர்தல்; உடன்படப் போவதில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹுல் தெரிவிப்பு

🕔 April 20, 2020

பொதுத்தேர்தலை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு தான் உடன்படப்போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றில் ஊடாக இந்த விடயத்தை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று, தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர், அஞ்சல்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்