ஊரடங்கு காலப் பகுதியில், சிறுவர் சித்திரவதை அதிகரிப்பு

🕔 April 19, 2020

ற்போதைய ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த முறைப்பாடுகளில் 43 வீதமானவை சிறுவர் சித்திரவதைக்குள்ளான சம்பவங்களுடன் தொடர்புபட்டவை என ​தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித விதான பத்திரன கூறியுள்ளார்.

மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 377 முறைப்பாடுகள் அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் 163 முறைப்பாடுகள் சிறுவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் கிடைத்துள்ளதாவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உளநல ஆலோசனை சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுனிசெப் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளூடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிப்பதனூடாக தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதான பத்திரன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்