கொரோனாவுக்கான சிகிச்சையின் பின், பிரித்தானிய பிரதமர், வீடு திரும்பினார்

🕔 April 12, 2020

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

லண்டன் சென் தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை ஒருவார சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.

உலக நாடு ஒன்றின் அரசுக்குத் தலைமை தாங்குபவர்களில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், கடந்த செவ்வாய்க்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அவர் வீடு திரும்பி உள்ள போதும் – உடனே பணிக்குத் திரும்பமாட்டார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்