வீட்டிலிருந்து அலுவலகக் கடமைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கம் உத்தரவு

🕔 March 19, 2020

நாளை 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அரச மற்றும் தனியார் துறையினருக்குப் பொது விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

‘வீட்டிலிருந்து பணி புரியும் வாரம்’ (Work from Home) என இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அரச மற்றும் தனியார்துறை பணியாளர்களை வீடுகளில் இருந்து தமது அலுவலகக் கடமைகளை செய்யுமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்ளுகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் – அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது.

இந்த அறிவித்தலைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்