அரச நிறுவனங்களுக்கு மேலும் 03 நாட்கள் விடுமுறை
அரச நிறுவனங்களுக்கு மேலும் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஆயினும் சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களுக்கே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்று திங்கட்கிழமையும் பொது விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு, இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.