கொரோனா: இலங்கையில் 18 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர்

🕔 March 16, 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 18 ஆக உயர்ந்துள்ளது.

சனிக்கிழிழமை வரை 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த தொகையானது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவாகும் போது 18 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று காலை அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று மாலை புதிதாக 07 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியிலிருந்து வருகை தந்து, பொலன்னறுவை – கந்தகாடு தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட வந்த 07 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான குறித்த 07 பேரும் பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் அனைவரும் கடந்த 10ஆம் திகதி முதல், பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று ஆய்வு மத்திய நிலையங்களுக்கு 14 நாட்கள் கண்காணிப்புக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் இத்தாலியிலிருந்து வருகைத் தந்த பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்