ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது: அமைச்சர் பந்துல

🕔 February 13, 2020

டகவியலாளர்களுக்கு உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச – தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று புதன்கிழமை காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.

அரச ஊடகங்களுக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ, தனிப்பட்டவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவோ இடமளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர்; சிறந்த ஊடகக் கலாசாரத்துக்கான ஊடகப் பரப்பை சரியான முறையில் பயன்படுத்துமாறு ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

உயர்தரத்தில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்துக்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்