பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 October 2, 2019

பாறுக் ஷிஹான்

யங்கரவாத  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 14 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது.

குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது  ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு பிரதேசங்களில் கைதான இவர்கள், பல மாதங்களுக்கு மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுளள்னர்.

அதனடிப்படையில்  தொடர்ச்சியாக  கடந்த காலங்களில்   தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சில  சந்தேக நபர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில், கடந்த தவணையில்  சில வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க கல்முனை  நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே தற்போதுள்ள சந்தேகநபர்கள் 14 பேருக்கும்  மீண்டும்  விளக்கமறியல் நீடிக்கப்பட்டு,  இவ்வழக்கு விசாரணை  எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம்  திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதில் கல்முனை சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேக நபர்களும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்