கொழும்பில் அதிகாலை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

🕔 July 28, 2019

கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

கொழும்பு, கொஹுவலை ஜம்புகஸ்முல்லா மாவத்தையில் ஜீப் வண்டியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான இருவரும் கொழும்பு – களுபோவில போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போதே ஜீப் வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உதயஹாமுல்ல பகுதியைச் சேர்ந்த சுசில் ருவான் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் தலபத்பிட்டியவைச் சேர்ந்த 40 வயதுடைய இந்திக்க ரோஷான் என்பவராவாவர். இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யபடவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்