நொவம்பர் 15 – டிசம்பர் 07; இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல்: உலகம் அழிந்தால் அன்றி, ஒத்தி வைக்கப்படாது

🕔 July 23, 2019

னாதிபதித் தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்டதொரு நாளில் நடத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உலக அழிவோ அல்லது உலகை மூழ்கடிக்கும் பேய் மழை பொழிந்தால் அன்றி வேறு எந்த காரணத்துக்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்

தேர்தல் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி தனது பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிவதற்கு முயற்சிக்க மாட்டார் என அவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தெரியவந்தது.

உலக அழிவோ அல்லது உலகை மூழ்கடிக்கும் பேய் மழை பொழிந்தால் அன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட மாட்டாது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 400 கோடி ரூபாய் செலவிட வேண்டிவரும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்