சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம்
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) புதிய தலைவராக ஹேமசிறி பெணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர் – மக்கள் வங்கி, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் விமானசேவை ஆகியவற்றின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும், மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதம மந்திரியாகப் பதவி வகித்த போது, அவரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.