ஜனாதிபதிக்கும் ஐ.தே.முன்னணிக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பு

🕔 December 2, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமாக நியமிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மீளவும் தெரிவித்துள்ளார்.

ஆயினும், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயரையே தாம் சிபாரிசு செய்வதாக, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்