ரத்தம் ஒழுக வெளியேறினார் திலும் அமுனுகம

🕔 November 15, 2018

நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, சபையிலிருந்து வெளியேறினார்.

நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பத்தின் போது, சபாநாயகரின் ஒலிவாங்கியை திலும் அமுனுகம உடைத்த போது, அவருடைய கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் ஒழுக சபையிலிருந்து அவர் வெளியேறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினரான திலும் அமுனுகம, சரத் அமுனுகமவின் மருமகனாவார்.

இன்று நாடளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் காயமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்