புதிய கட்சி ஆரம்பித்தார் அனந்தி

🕔 October 21, 2018

ழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை, வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளார்.

புதிய கட்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இக் கட்சியின் செயலாளர் நாயகமாக பதவியேற்றுள்ள அனந்தி சசிதரன், அதன் கொள்கைப் பிரகடனத்தை ஆரம்ப நிகழ்வில் வெளியிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம், வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன், அந்தக் கட்சியுடன் பல தடவை முரண்பட்டு வந்த நிலையிலேயே, புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.

அனந்தி சசிதரன் – விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி எழிலனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்