ஜப்னா முஸ்லிம் நடத்திய கட்டுரைப் போட்டி; ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெறுவோர் விபரம் அறிவிப்பு

🕔 October 17, 2018

டக்கு முஸ்லிம்களின் 1990 இனச்சுத்திகரிப்பை ஆவணப்படுத்தும் நோக்குடன், ஜப்னா முஸ்லிம் செய்தித்தளம் கட்டுரைப் போட்டியொன்றினை நடத்தியிருந்தது.

இந்தப் போட்டியில் மொத்தப் பரிசாக ஒரு லட்சம் ரூபாவினை வழங்கவுள்ளதாகவும் போட்டிக்கான அறிவிப்பின்போது குறிப்பட்டிருந்தது.

அந்த வகையில், குறித்த போட்டியின் முடிவுகளை தற்போது, ஜப்னா முஸ்லிம் செய்தித்தளம் அறித்துள்ளது.

மிகவும் தரம் வாய்ந்த நடுவர் குழாமினால், வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என, இது குறித்து ஜப்னா முஸ்லிம் தெரிவித்திருக்கிறது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம், 1990 இனச்சுத்திகரிப்பு, அதற்கு பிந்திய நிலை, எதிர்காலம் ஆகியவற்றை உள்ளீர்த்திருத்த கட்டுரைகளுக்கு முன்னுரிமை வழங்கி வெற்றியாளர்களை நடுவர்கள் தெரிவு செய்துள்ளனர்.

இந்த போட்டியில் தெரிவான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, நூலாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்