அமைச்சர் பொன்சேகாவின் சகா ஒருவர், ஹெரோயினுடன் கைது
ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் நேற்று புதன்கிழமை மினுவாங்கொட பொலிஸ் பிரிவுப் பகுதியில் கைது செய்துள்ளனர்.
இவர், அமைச்சர் சரத் பொன்சேகாவின் நெருங்கிய சகா என்று, ‘த ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
கைதானவரிடமிருந்து 08 கிராம் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ எனக் கூறப்படும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் ஆகியவற்றினை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர், ‘பொலிஸ்’ என்று அழைக்கப்படும் அருண சாந்த அத்தநாயக்க என்பவராவார்.
இவர் பேலியகொட பகுதியில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.