நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து, நாமல் ராஜபக்ஷ கிண்டல்

🕔 May 1, 2018

ல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை கடத்தி வருகிறது.

மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள். அதன் வெளிப்பாடுதான் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய வாக்குகளாகும். தேர்தல் பெறுபேறுகளை கருத்தில் கொண்டாவது மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக அரசாங்கம் ஏதாவது செய்யும் என அனைவரும் எதிர்ப்பார்த்தார்கள் ஆனால் அதையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.

அமைச்சரவை மாற்றங்களை செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை கடத்தும் இந்த அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக எந்த உருப்படியான காரியத்தையும் செய்யவில்லை. இந்த அமைச்சரவை மாற்றத்தினாலும் மக்களுக்கோ நாட்டுக்கோ நல்லது நடக்கும் என நம்பமுடியாது.

இந்த நல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைத்துள்ளது.கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த விடயம் பதியப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்