நான்கு நாட்களில் 10 லட்சம் நாணயத் தாள்கள் அச்சிடுகை; நாட்டில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதென்கிறார் பீரிஸ்

🕔 April 11, 2018

த்து லட்சம் நாணயத் தாள்கள் கடந்த வாரத்தின் நான்கு நாட்களில் அச்சிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒருபோதும் இல்லாத வகையில், இவ்வாறு நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோந்து அடைந்துள்ளதன் வெளிப்பாடே இதுவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்