உள்ளுராட்சி சபைத் தலைவர்கள்: தெரிவுசெய்யப்பட்டால் அசைக்க முடியாது

🕔 March 27, 2018

– வை எல் எஸ் ஹமீட் –

ள்ளுராட்சி சபையொன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து, அச் சபையின் மேயர் அல்லது தவிசாளரை நீக்குவதற்கு தற்போதைய உள்ளூராட்சி சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை.

இரண்டு வருடங்களுக்கு வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலமும் மேயர் அல்லது தவிசாளரை பதவிநீக்க முடியாது.

வரவு-செலவுத்திட்டம், முதல்முறை தோற்கடிக்கப்பட்டால் மேயர் அல்லது தவிசாளர் மீண்டும் அதனை சமர்ப்பிக்கலாம். அதுவும் தோற்கடிக்கப்பட்டால் வரவு-செலவுத் திட்டம் தாமாக நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.

இரண்டு வருடங்களின்பின் கொண்டுவரப்படுகின்ற வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையும் தோற்கடிக்கப்பட்டால் மேயர் அல்லது தவிசாளர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படுவார். அதாவது பதவியிழப்பார்.

அதாவது, இரண்டு வருடங்களுக்கு பதவிக்கு முழு உத்தரவாதம் உண்டு. அடுத்த வரவு-செலவுத் திட்டத்துக்கு சில மாதங்களோ ஒரு வருடமோ செல்லலாம்.

ஆகவே, மொத்தமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் உள்ளுராட்சி சபையொன்றில் பெரும்பான்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதன் தலைவர் கவலையில்லாமல் ஆட்சி செய்யலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்