திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்: பௌத்த பிக்குகளும் வன்முறையில்

🕔 March 5, 2018

– அஹமட் –

திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது பாரிய தாக்குல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

அங்குள்ள முஸ்லிம்களின் கடைகளுக்கு, சிங்களக் காடையர்கள், தீ வைத்து வருகின்றனர்.

அதேவேளை, திகன பள்ளிவாசல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களத்தில் 2000 க்கும் மேற்பட்ட சிங்கள காடையர்கள் நின்று கொண்டு இந்தத் தாக்குதலை மேற்கொள்வதாகவும், பௌத்த பிக்குகள் இவர்களை தலைமை தாங்குவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அங்குள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இப்பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் வீடுகள் தாக்கப்பட்டு வருவதோடு, வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்தில் முஸ்லிம் நபரொருவருக்கும் சிங்களவர் ஒருவருக்குமிடையில் சில தினங்களுக்கு முன்ன இடம்பெற்ற சண்டையில் பாதிக்கப்பட்ட சிங்களவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தமையினை அடுத்தே, இந்த இனவாத தாக்குதல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்