தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் அறிவிப்பில்லை: சபாநாயகர் தெரிவிப்பு

🕔 February 20, 2018

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் தனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளார்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் நாளை புதன்கிழமை அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் தனித்தனியாக ஆட்சியமைப்பதற்கான முஸ்தீபுகளை எடுத்துவரும் நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்