அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருடன் வருவோம்: மஹிந்தவிடம் சுசில் உறுதி

🕔 February 19, 2018

க்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத அரசாங்கத்தை இந்த வாரத்துக்குள் அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கத் தவறினால், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், ஒன்றிணைந்த எதிரணியில் இணைவார்கள் என்று, அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இணைபவர்களில் தானும் ஒருவரெனவும் அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வெள்ளிக்கிழமையன்று அவரைச் சந்தித்த போதே, அமைச்சர் சுசில் இந்த உறுதிமொழியினை வழங்கியுள்ளார்.

“தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது மக்கள் ஆணையினை இழந்து விட்டது. எனவே, அது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்றும் அவர் இதன் போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; அவ்வாறு இணையும் அனைவரையும் தான் வரவேற்பதாகக் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்